உலக மக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டிய சிந்தனையாளர்களின் வரிசையில் பெருமையோடு வீற்றிருக்கிறார் திருவள்ளுவர். மனித குளம் எந்த இடத்தில வாழ்ந்தாலும் எந்த சூழலில் வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தாலும் அங்கெல்லாம் ஒளியை பாய்ச்சி வாழ்வு சிறந்து விளங்க வழி காட்டும் நூல் திருக்குறள்.

சாதி சமயங்களால் வேறுபட்டவர் அனைவரும் ஏற்கும் கருத்துப் பொதுமை, கற்பவர் நெஞ்சில் ஆழப் பதியும் வண்ணம் எடுத்துரைக்கும் வெளிப்பாடு, இலக்கிய அழகு பொழிய அமைந்த மொழிநடை, காலந்தோறும் புத்தம் புதிய சிந்தனையை தூண்டும் அருள்வாக்கு ஆகியவை எல்லாம் திருக்குறளின் தனித்தன்மைகள்.

0001. அகர முதல எழுத்தெல்லாம்

0001. Agara mudhala ezhuthellam

  • குறள் எண்
    0001
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal)
  • இயல்
    பாயிரம் (Paayiram)
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhthu)
  • குறள்
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு
  • விளக்கம்
    அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற் குறளால் உணர்த்தப் பெற்றது.
  • Translation
    A, as its first of letters, every speech maintains;
    The "Primal Deity" is first through all the world's domains.
  • Meaning
    As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.

0 comments:

Post a Comment